மாணவர் தற்கொலை விவகாரம்: ஆசிரியரிடம் முறையாக விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை

கோவை, ஜனவரி 12

கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் முறையாக விசாரணை நடத்தக்கோரி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 



ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரின் மதியம் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை பள்ளியின் உதவியாளர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜாபரை வீட்டுக்கு அழைத்து வந்த உதவியாளரிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்ற விவரத்தை மாணவரின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதற்கு பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது. இந்த இடைவெளியில் வீட்டிற்குள் புகுந்த ஜாபர், கதவை தாழிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜாபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், மாணவர் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஜாபரின் உறவினர்கள் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையரிடம் இதுகுறித்த மனுவினையும் அளித்தனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...