சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை: ப. சிதம்பரம் ஆவேசம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் விசாரிக்க முடியாது. சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சோதனை நடைபெறும் என நேற்றே எதிர்பார்த்தேன். இந்த வழக்கில் இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. 

தில்லியில் உள்ள எனது வீட்டில் தேவையில்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு கார்த்தி வசிக்கவில்லை. சென்னை, தில்லி வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. படுக்கையறை, சமையலறையில் சோதனை நடத்தினர். இதுவரை 3 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம். நாடாளுமன்றத்தில் நான் அளித்த விளக்கம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...