நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா சங்கர் விருது

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

ஜனவரி 15

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.வாசன் விருது இசைஞானி இளையராஜாவுக்கும், சிறந்த படத்திற்கான விருது அறத்திற்கும் என நகைச்சுவை, சிறந்த நடிப்பு, இயக்கம் என திரையுலகில் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாகுபலி படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் சத்யராஜூக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே இந்த விழாவின் போது, உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் நினைவாக நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா- சங்கர் விருதும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சத்யராஜூக்கு விருது வழங்கிய கவுசல்யா கூறுகையில், நடிகராக மட்டும் இல்லாமல் சாதிய அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் சத்யராஜ். தற்போதைய பெரும்பாலான நடிகர்கள் தனது தொழிலை மட்டும் பார்த்து வரும் நிலையில் சமுதாயத்தில் நிகழும் இன்னல்களைக் கண்டு, மக்களோடு மக்களாக நிற்கும் மனிதர்களில் ஒருவர் சத்யராஜ் என்றார்.

சத்யராஜ் இதுகுறித்து கூறுகையில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விருது குறித்து முன்பே என்னிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது வேறு ஏதேனும் மூத்த நடிகர்களின் கையால் இதனை பெறுவேன் என நான் நினைத்திருந்தேன். ஆனால், தற்போது கவுசல்யாவின் கையால் இந்த விருதினை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சமூகத்தில் தனக்கு ஏற்பட்ட சாதிய அடக்குமுறைக்கு அடிபணிந்து இருக்காமல் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கவுசல்யா பாராட்டுக்குரியவர். இங்குச் சாதிய அடிப்படை கட்டமைப்புகளை மாற்றினால் மட்டுமே தெளிவான சமூகம் பிறக்கும். அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் கவுசல்யா போன்ற ஒவ்வொருவரும் போராளிகளே என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...