அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் : சீறிப்பாயும் காளைகள்

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டையொட்டி 1000-த்திற்கும் மேற்பட்ட காளைகள் அலங்காநல்லூர் வந்துள்ளன. முன்னதாக, 1,241 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. இதற்காக 10 மருத்துவ குழுக்கள் உடல் பரிசோதனை செய்துள்ளனர். அதேபோன்று காளைகளை 12 கால்நடை மருத்துவ குழுக்களும் பரிசோதித்தனர். 

இதைத்தொடந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலாவதாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பள பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல, சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ரசித்து பார்த்தனர். 

பின்னர், நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஜல்லிக்கட்டை தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பார்த்து வருகின்றனர். இது தமிழகத்திற்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த பெருமை. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். காளைகளை துன்புறுத்திடாமல் தங்களது குழந்தைகளை போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர். என்றார். 

”ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும்” எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக விழா மேடையில் அவர் பேசுகையில், பல தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும், என்றார்.

இதனிடையே, அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அறிவித்தனர். உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...