பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார மாநாடு இன்று துவக்கம்

கோவை பேரூராதீனம் சாந்த லிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.


கோவை, ஜனவரி 17

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.



மாநாட்டில் இலங்கை, மொரிசியஸ் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த பனை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை எடுத்துரைக்க உள்ளனர். இதன் முதல் நாளான இன்றைய நிகழ்வில், பனை படும் பாடு என்ற பாடல் தொகுப்பு, பனை பொருளாதாரம் குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மேலும், பனை சார்ந்த மதிப்பு கூட்டிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, நிகழ்வு குறித்து ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், 'தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் அவைகள் வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. பனை மரத்தினை காக்கவும், தரிசு நிலங்களில் பனைமரம் வளர்ப்பதால் பனை சார்ந்த கிராம பொருளாதாரம் மேம்பட வாய்ப்பாக அமையும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் நிலத்தடி நீரை பாதுகாக்க பனை மரங்களை மீண்டும் குளக்கரைகளில் நடவு செய்ய வேண்டும். பனை பாதுகாப்புக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்றார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பனை மரம் குறித்த மாணவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...