ஜெயலலிதா 4-ம் தேதி உயிரிழந்தார் என்ற திவாகரன் கருத்துக்கு தினகரன் மறுப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேது இறந்துவிட்டதாக திவாகரன் கூறுவது அவருடைய கருத்து என்று எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 17

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேது இறந்துவிட்டதாக திவாகரன் கூறுவது அவருடைய கருத்து என்று எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- 

ஜெயலலிதா மரணத்திற்கு முந்தய நாள் மாலை அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டது என தகவல் வந்தது. 

இருதய பிரச்சினை ஏற்பட்டதை திவாகரன் மாற்றி கூறியிருக்கலாம். ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல் கிடைத்து அப்பல்லோ  மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு எக்மோ மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது.

மரணம் தொடர்பாக மருத்துவர்கள் சொல்வதை மட்டுமே ஏற்க முடியும்.

திவாரகன் கூறியுள்ள கருத்திற்கு அப்பல்லோ நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திருப்பூர் மருத்துவ மாணவர் மரணம் தொடர்பாக உரிய முறையில்  விசாரணை நடத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வேதா இல்லம் அரசுடைமையாக்குவதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. 

இ.பி.எஸ்  அரசு எதை செய்தாலும் அதை தவறு என சொல்லும் அரசியல்வாதி நான் கிடையாது.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், அதை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னணியில் இருந்த அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர். 

எம்.எல்.ஏ வாக சட்ட சபையில் 4 நாட்கள் அனுபவம் புதிய அனுபவமாக இருந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...