வங்கி கடனை ரத்துசெய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் மனு

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர், ஜனவரி 18

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், தெக்கலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூலைப் பெற்று துணியாக நெய்து கொடுத்து அதற்குண்டான கூலி பெறுவது வழக்கம். இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டு 27 மற்றும் 31 சதவிகிதமாக ஒப்பந்தமானது.

இந்நிலையில், ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர். மேலும் வங்கியில் தொழிலுக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானதை அடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...