நீட் தேர்வு கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்தையும் பரிசீலித்து தயாரிக்க மத்திய அரசு முடிவு

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி 18

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்திள்ளது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேசிய தகுதி நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களால்கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. தற்போது வரை நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

பல மாநிலங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத்திட்டங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனைப் போக்க மாநில பாடத்திட்டங்களையும் நீட் கேள்வித்தாளில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மனித வள அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கும்போது, அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் கணக்கில் கொள்ளவிருப்பதால் இனி மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்குப் பின்னடைவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தினால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது. 

ஆனால், மாநில பாடத்திட்டங்களை வைத்து கேள்வித்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக கேள்வித்தாளை மத்திய அரசு தயாரிக்கப்போகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...