கோவையில் சிறுவனுக்கு தவறாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

கோவையில் சிறுவன் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 18

கோவையில் சிறுவன் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகன் விஷ்ணு (4). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடதுபுற சிறுநீரகம் சராசரி அளவை விட சிறியதாக இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது முதல் சிறுவன் கடும் வயிற்று வலியால் அவதியுற்றுவந்தார். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, வயிற்றுப் பகுதியில் ஒரு துணி மற்றும் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட பஞ்சு இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வினோத்குமார், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு துணி மற்றும் பஞ்சினை அகற்றுமாறு மருத்துவர்களிடம் கோரியதன் பேரில் அவை அறுவை சிகிச்சை மூலமாக அது அகற்றப்பட்டது.

இந்த சூழலில், தன் மகனுக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட எஸ்.ஆர்.ஜி மருத்துவமனை மருத்துவர்களான தர்மேந்திரா, வினோத் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வினோத்குமார் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி எஸ்.ஆர்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்களான தர்மேந்திரா, வினோத் மற்றும் கண்ணதாசன் ஆகிய மூவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...