மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 18

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அகரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த ஊர்கள் இடம்பெறவில்லை எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து, 2018-ல் அரசாணை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு நடத்தியது தவறு இல்லையா..?. இது சட்டவிரோதம் ஆகாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விளக்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், 2018-ல் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஜன.,12 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...