ஒரு பள்ளிக்கு இரண்டே ஆசிரியர்கள் : மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை கரும்புக்கடையை அடுத்த சாரமேடு பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 98 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கும் வாயிலாக இப்பள்ளி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என மொத்தமாகவே இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.



இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான மோகனா என்பவர் கூறுகையில், "98 மாணவர்கள் பயிலும் பள்ளியில் மாநகராட்சி பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தலைமையாசிரியர் பணி நிமித்தம் காரணமாக வெளியே சென்றுவிட்டால் ஒரேஒரு ஆசிரியர் மொத்த பள்ளியையும் நிர்வகிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் பிரத்தியேகமான சமையல் அறை இல்லை. இதனால், படிக்கட்டுகளின் கீழ் தான் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.

சிலை வைப்பதற்கும், விழா கொண்டாடுவதற்கும் ஆளும் அரசு பணத்தை செலவிட்டு வருகிறது. ஆனால், மாணவ, மாணவிகளின் வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் கல்விக்கு எந்த நலனையும் செய்ய தவறிவிட்டது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...