​பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 19

தமிழகத்தில் தற்போது  6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி கட்டண விபரம்:-

புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகர குளிர்சாதன பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புறநகர் விரைவுப்பேருந்தில் அதிகபட்ச கட்டணம் ரூ.17-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆகவும், மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை தமிழக அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...