பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர். 

தமிழக அரசு நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண கட்டணமாக இருந்த ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆகவும், ரூ. 9-லிருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பேருந்து, சொகுசு பேருந்து கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் இந்தக் கட்டண உயர்வு பகல் கொள்ளை. மக்கள் விரோதசெயல். தமிழக அரசு 20% தான் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. 80% கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது, எனக் கூறினர். 

பேருந்து பயணி கோபால் என்பவர் கூறும்போது :- சேலம் செல்ல ரூ. 100 முதல் ரூ. 120 வரை இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ. 200-ல் இருந்து ரூ. 220 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறை ஊழியர்களின் பணத்தை வேறு காரணங்களுக்காக செலவு செய்துவிட்டு, அதனை ஈடுசெய்ய இந்த உயர்வை அமல்படுத்தி உள்ளது. இது பகல் கொள்ளை. சாதாரண கட்டணம் என நினைத்து பேருந்தில் ஏறிய பயணிகள் சிலர் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பினர். இவ்வாறு தெரிவித்தார். 

கமலா என்ற பெண்மணி கூறும்போது, தனக்கு 3 குழந்தைகள் உள்ளது. தன்னுடைய மாத சம்பளமே ரூ.4,000-ம் தான். குழந்தைகள் கல்வி செலவு குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உள்ளபோது இந்தப் பேருந்து கட்டணம் பேரிடியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

மென் பொறியாளர் பிரனேஷ் கூறுகையில், இந்தக் கட்டண உயர்வு என்பது அனைவருக்கும் பொருந்தும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி.யில் இருந்து மக்கள் மீளாத நிலையில், இந்தப் பேருந்து கட்டண உயர்வு மக்களை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பும் தூரம் வெகுதொலைவில் இல்லை. இந்தப் பேருந்து கட்டண உயர்வு பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...