அப்பல்லோவின் போலி மருந்து சீட்டைத் தயாரித்த மூன்று பேர் கோவையில் கைது

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 20

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடை ஒன்றிற்கு சென்ற மூன்று வாலிபர்கள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பாரஜரஜதாஸ் கையெழுத்து இடப்பட்ட மருந்து சீட்டை கொண்டு மாத்திரை வாங்க முற்பட்டனர். அந்த மருந்து சீட்டில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் இடம்பெற்றிருந்தது.

அந்த மருந்து சீட்டில், அப்பல்லோ மருத்துவமனையின் பெயர், மருத்துவர் பெயர் மற்றும் கையெழுத்து இருந்தது. ஓடிசாவில் இருந்து இங்கு மருந்து வாங்கவேண்டியதன் அவசியம் என்ன..? என்று சந்தேகித்த மருந்துக்கடை ஊழியர்கள், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), ஜவஹர் (19) மற்றும் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள், போலி மருந்து சீட்டு மூலம் போதை மருந்துகளை பெற முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...