வனப்பகுதியில் செடிகளை நட்டுவிட்டு பிளாஸ்டிக் கவா்களை விட்டு செல்லும் அவலம் - அலட்சியமாகச் செயல்படும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் செடிகளை நடவு செய்த தனியார் அமைப்புகள் பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்காமல் அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், ஜனவரி 20

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் செடிகளை நடவு செய்த தனியார் அமைப்புகள் பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்காமல் அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இப்பகுதி வனத்தில் உயிர் வாழ்கின்றன. இவை, வனத்தில் உள்ள இலை, பழங்கள் மற்றும் மூங்கில் உள்ளிட்டவற்றை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. 

வனத்துறை சார்பில் மரங்கள் வளர்க்கப்படுவது வழக்கம். இவைகள், குளிர்காலத்தில் செடிகள் நடப்பட்டுத் தானாக வளா்ந்துவிடும். தற்போது, மாவட்ட வன அலுவலர் முகமது சகாப் உத்தரவின் பேரில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் பல இடங்களில் செடிகளை நட உத்தரவிட்டு தனியாரிடம் வேலைகளை ஒப்படைத்துள்ளார். 

இதனிடையே, தனியார் அமைப்புகள் செடிகளை நட்டுவிட்டு பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களைக் கொண்டு வனப்பகுதிக்குள் செய்ய வேண்டிய பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



"வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன. இதனால், வனப்பகுதிக்குள் எந்த ஒரு பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு செல்லாதவாறு வனத்துறையினர் சோதனைச் சாவடியில் தீவிரமாக வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர். ஆனால், பொதுமக்களை சோதனை செய்யும் அதிகாரிகள், வனப்பகுதிக்குள் செடிகளை நடுவதற்கு எடுத்து சென்ற 3,000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கவா்களை அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதனால், வனவிலங்குகள் அதனை சாப்பிட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபோனறு அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்," என சமூக ஆர்வலர் மூர்த்தி கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...