அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும்: நடிகர் மயில்சாமி

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் மயில்சாமி முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பேருந்து கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் மக்கள் வருத்தத்துடன் பேசுவது மன வேதனையளிக்கிறது. 

அரசு மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கிறது. முதலில் மக்களுக்கு நல்ல பேருந்துகளை இயக்க வேண்டும். மக்கள் கடுமையான வருத்தத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு அரசை சரியான முறையில் கையாள தெரியவில்லை. அரசு என்பது மற்றொரு அரசுக்கு பணியக்கூடாது. ஆனால், தற்போது பணிகிறார்கள். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 கவிஞர் வைரமுத்து இரண்டாவது நாளே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் தனது தாய் என்று கூறிய பின்பும் தொடர்ந்து விமர்சிப்பது பைத்தியக்காரத்தனம். நடிகர் கமல்ஹாசன், கலாம் சமாதியிலிருந்து அரசியல் துவங்குவதை வரவேற்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் மாற்றம் உருவாகும். அதே வேளையில், அவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...