பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் வாகனம் வழங்கப்படவுள்ளது- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியானவர்கள் இன்று (ஜனவரி 22) முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 22

கோவை மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியானவர்கள் இன்று (ஜனவரி 22) முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியம் ரூ.25000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். பயனாளிகளே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். வாகனம் 01.01.2018-க்கு பின்னர் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். 125 சிசி திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த வாகனங்கள் பணிபுரியும் மகளிருக்கு வழங்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுய தொழில் செய்யும் பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், மாவட்ட கற்றல் மையம், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இத்திட்டத்தின்கீழ் இரு சக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் இருக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்து திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5 கடைசி நாளாகும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

இத்திட்டத்தின்கீழ் பயன் பெற கீழ்க்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வயதிற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வேலையின் தன்மைச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடமிருந்து பெற வேண்டும்), ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட - பழங்குடியினராக இருந்தால்) ஆகியவற்றை சமர்;ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...