சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரை கோவையில் தொடக்கம்

சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரையை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 22

சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரையை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 



கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் மற்றும் கல்வியாளர்கள் ஆன்மீக மையங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று துவங்கிய ரதயாத்திரை பல்வேறு மாவட்டங்களின் வழியாக சென்று வரும் பிப்ரவரி 22-தேதி சென்னையில் நிறைவடைகின்றது. இந்த ரதயாத்திரையானது 30 நாட்கள், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 3,000 கி.மீ பயணம் செய்து 2 லட்சம் மாணவிகளை சந்திக்கின்றது. 



ரதயாத்திரை துவக்க விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், நான் பேசுவதற்காக நிவேதிதை பற்றிய புத்தகத்தை படிச்சிட்டு வந்ததை, தனக்கு முன்னாடி அனைவரும் பேசிவிட்டனர். கரும்பு சக்கை மாதிரி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் உங்கள் முன்னாள் நிற்கின்றேன். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக இருந்த மார்கெரட் நோபல்தான் சகோதரி நிவேதிதை. வாட்ஸ் ஆப்-பில் இப்போது வரும் சிஷ்யைகளை பத்தி படங்கள் வருகின்றது. அந்த சிஷ்யைகளை பற்றி நான் பேசலை. புரிஞ்சா புரிஞ்சுக்கங்க. சுவாமி விவேகானந்தர் - சகோதரி நிவேதிதா இடையேயான உறவு தந்தை மகள் உறவைப் போன்றது. பெண்களுக்கு வீர உணர்வை ஊட்டு என விவேகானந்தர் நிவேதிதையிடம் தெரிவித்தார். விவேகானந்தரின் போர்வாளாக இருந்தவர் நிவேதிதை. 



எனக்கு தேவையான அனைத்து கருத்துகளும் சனாதான தர்மத்தில் கிடைத்தது. நான் ஏன் மற்றவர்களைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்த நிலையில், சகோதரி நிவேதிதை குறித்து படிக்கும் வாய்ப்பினை வானதி சீனிவாசன் ஏற்படுத்திக் கொடுத்தார். அனைத்துக் கூட்டங்களிலும் இனி விவேகானந்தர், நிவேதிதா குறித்து பேசுவேன். செல்போனும், கேமராவும், இணையமும் வராமல் இருந்திருந்தால் பாலியல் பலாத்காரங்கள் நடக்கவே நடக்காது. இவ்வாறு நடிகர் விவேக் தெரிவித்தார்.



 

இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், காவி நிறம் என்பது இந்துக்களின் அடையாளம் என முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால், காவி என்பது இந்துக்களின் நிறம் அல்ல. காவி என்பது பாரததேசத்தின் நிறம். காவி நிறத்தை வைத்து சகோதரி நிவேதிதா முதன்முதலில் தேசிய கொடியை வடிவமைத்தார். நாட்டின் தேசியகீதமாக இருக்க வேண்டியது ”வந்தே மாதிரம் பாடல்” என்பதையும் வலியுறுத்தியவர் சகோதரி நிவேதிதை. 



மேலும். ஒவ்வொரு இந்தியனின் புனிதநூல் இந்திய அரசியலமைப்பு சட்டம் என மோடி அனைத்து கூட்டங்களிலும் தெரிவித்து வருகின்றார். சிவன் சொத்து குலநாசம் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால், இந்திய நாட்டிற்கு கேடு என்பதே கிடையாது. மாணவிகள் அனைவரும் நிவேதிதைகளாக தோன்ற வேண்டும். என்றார். 



நிகழ்ச்சியின் முடிவில் நிவேதிதை மற்றும் விவேகானந்தர் உருவசிலைகளுடன் கூடிய ரத யாத்திரையை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலர் தூவி துவங்கி வைத்தார். 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...