வரும் 24-ம் தேதி ”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்து விளக்கக் கருத்தரங்கு

”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 22

”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உள்மாநில சரக்கு போக்குவரத்து வசதிக்காக ”இ-பில் ஜிஎஸ்டி” முறை பிப்ரவரி 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இ-பில் ஜிஎஸ்டியைப் பதிவு செய்துவிட்டால், மாநிலத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு எந்த தடையுமின்றி ரூ. 50,000 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் உள்ள சரக்குகளை எடுத்துச் செல்லலாம். இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதற்காக சரக்கு வாகன உரிமையாளர்கள், வரி தொடர்பாக அதிகாரிகளையோ, சோதனை சாவடிகளையோ அணுக வேண்டியதில்லை.

இந்த நிலையில், இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளை களைய கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் மாநில வணிகவரித்துறையின் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இ-பில் ஜி.எஸ்.டி. முறை குறித்து எடுத்துரைக்கப்பட இருக்கிறது. 

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...