சித்திரை சாவடி அணைக் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சித்திரை சாவடி அணையின் நீர்வரும் பாதையைப் பலப்படுத்த கரையின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியால் அப்பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் நொய்யல் ஆறானது தொண்டாமுத்தூர் உள்ளிட்டு கோவை நகரங்களுக்கு மிக முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்தரை சாவடி அணையிலிருந்து செல்லக் கூடிய கிளையாறு தொண்டாமுத்தூர், சுண்டம்பாளையம், வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீராதாரமாகவும் விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 4000 ஏக்கர்  விவசாய நிலங்கள் இந்த அணையை நம்பி உள்ளன.

இந்நிலையில், சித்திரை சாவடி அணையின் நீர்வரும் பாதையைப் பலப்படுத்த கரையின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தளம்  அமைக்கும் பணி பொதுப்பணித்துறையால் சுமார் ரூ. 2 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.



இதனால், அப்பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் கட்டிட வேலை நடைபெற்று வரும் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.



"இந்த பணிகள் தொடர்ந்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டு விடும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் தொடர வேண்டும்," என்றார் விவசாயி செ.வேலுசாமி.



இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "சித்திரை சாவடி அணையை மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். கான்கிரீட் சுவர்கள் அமைப்பதால் நிலத்தடி நீர் மற்றும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும். எனவே கான்கிரீட் சுவர்களுக்கு பதிலாக மாற்று கட்டுமான பொருட்களைக் கொண்டு அணையை புதுப்பிக்க வேண்டும்" என்றார்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...