திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா ஜனவரி 25-ம் தேதி தொடக்கம்

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர், ஜனவரி 23

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற உள்ள இதில், அமைக்கப்படவுள்ள 150 அரங்குகளில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறவுள்ளன.

கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 1 கோடியே 25 லட்சம் ரூபாயிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டது. இந்தாண்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...