திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தால் வெறிச்சோடியது வருவாய்துறை அலுவலகங்கள்

திருப்பூர் ஜனவரி 23

திருப்பூரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இதில் திருப்பூர்,கோவை,ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும், விடுமுறை நாட்களில் கூடுதல் பணி நேர மதிப்பூதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும்,நேரடி வட்டாட்சியர் நியமனம் கூடாது உள்ளிட்ட 20 அம்ச கோரில்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

மேலும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவில்லை என்றால் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

இதனிடையே திருப்பூர் வடக்கு தெற்கு, உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்களில் அலுவலர்கள் பணிக்கு  ஓட்டுமொத்தமாக செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் வருவாய்துறை அலுவலகங்கள் வெரிச்சோடி காணப்பட்டது. பணிகள் முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...