தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் : சட்டப்பேரவை செயலாளரிடம் எம்.எல்.ஏ. தினகரன் கடிதம்

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார்.

ஜனவரி 23

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். 

பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்தினர். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டபேரவையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், தமிழக அரசில் நிதி பிரச்சினை நிலவும் நிலையில், ஊதிய உயர்வு தேவையற்றது என கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...