மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஜனவரி 24

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சராக இருந்த போது 1992-93-ம் ஆண்டுகளில் ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மரணமடைந்து விட்டனர். 3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

மாட்டு தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் போடப்பட்டன. இதில், ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தண்டனை விவரம் பிற்பகல் 2 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது. மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...