பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி : கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் கருத்து

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனக் கூறி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனவரி 24

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனக் கூறி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கறிஞர் ஆர். சித்ரவேலு, வி. முனிகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி அரசு பேருந்து கட்டணத்தை கடந்த 20-ந்தேதி முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வால், அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள 80 சதவீதம் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இதுநாள் வரை மற்ற போக்குவரத்தைக் காட்டிலும், பேருந்து கட்டணம் மட்டும்தான் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது பேருந்து கட்டணம் தான் மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

மேலும், கட்டண உயர்வுக்கு அரசு தற்போது கூறும் பல்வேறு காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரேநாள் இரவில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி முடிவு செய்து, மறுநாள் காலையில் அதிக பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தனர். இதனால், அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் பெரும் தொகையைப் பேருந்து கட்டணத்திற்கு செலவிட நேரிடுகிறது.

ஏற்கனவே, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்தப் பேருந்து கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பல பொருட்களின் விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் எப்படி தலையிடமுடியும். என்றார். ஆகவே, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, அனைத்து அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...