கே.ஜி.குழுமத்தின் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்ட முன்பதிவு குடியரசு தினத்தில் துவக்கம்

கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம் தேதியன்று துவங்க உள்ளது.

கோவை, ஜனவரி 24

கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம்  தேதியன்று துவங்க உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கிருத்திகா விக்ரம், சஞ்சய் விஜயகுமார் மற்றும் கண்ணையன் ஆகியோர் இத்திட்டம் குறித்து கூறியதாவது:-

கே.ஜி.குழுமம் 2012-ம் ஆண்டு முதல் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நான்காவது அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் காளப்பட்டி அடுத்த நேரு நகரில் 136 ஏக்கர் பரப்பளவில் 136 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், 400 சதுர அடியில் ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் முதல் துவங்குகிறது. 700 சதுர அடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தரமான பொருட்கள் கொண்டு கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். இதற்கான முன்பதிவு அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள கே.ஜி.ஹவுஸில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று காலை 8 மணியளவில் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.

இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும். பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...