செல்பி மோகத்தால் உயிரை பணையம் வைத்த இளைஞர் : அதிர்ச்சி வீடியோ

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர்.

ஜனவரி 24

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர். 



ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொள்வதற்காக பலர் காயமடைந்தும், உயிரை விட்டும் உள்ள சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் வெளியிட்ட செல்பி வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று காஷ்மீரிலும் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தண்டவாளத்தின் நடுவே அவர் படுத்திருப்பதும், அவரின் மீது ரயில் வேகமாகக் கடந்து செல்வதாகவும் அந்த வீடியோ உள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக நண்பர்களிடம் சொல்லி இதுபோன்ற அபாயகரமான வீடியோவை அந்த இளைஞர் எடுக்கச் சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இது போன்ற முட்டாள் தனமான செயல்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...