உடுமலை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி உடல்நலக்குறைவால் காலமானார்

உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.


திருப்பூர், ஜனவரி 25

உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

உடுமலைப்பேட்டை அருகே குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், கல்லூரி பயிலும் போது, தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை மர்ம கும்பல் ஒன்று உடுமலை பேருந்து நிலையம் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து நடந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், கடந்த டிசம்பர் 12ந்தேதி இறுதி தீர்ப்பு வழங்கினார். அதில், முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 9ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலைக்கு எதிராக நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கிய தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.

இந்த நிலையில், கோவையில் இருந்த அலமேலு நடராஜனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கோவை, திருப்பூர் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீதிபதி அலமேலு நடராஜன், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...