ஜெயலலிதா மரண விவகாரம்: 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜனவரி 25

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் கைரேகை வாங்கிய அரசு மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். 

அப்போது, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த அனைத்து விவரத்தையும் எழுத்துப்பூர்வமாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சில மருத்துவ குறிப்புகள் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுக் கொண்டதின் பேரில் நான் கொடுத்தேன். அதற்காக சில கேள்விகளை கேட்டதற்கு நான் பதில் கூறினேன். எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தேன். தேவைப்பட்டால் அடுத்த மாதம் மீண்டும் ஆஜராவேன். தற்போது எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துள்ளேன். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ள விவரங்கள் குறித்து அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராகிய போது, சசிகலா மீது புகார் கூறியவர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பினர் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, சசிகலா விளக்கம் அளிப்பது தொடர்பாக 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இதுகுறித்து ஆணையம் 30-ந்தேதி தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என தெரிகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் செயலாளர்களாக பணியாற்றிய வெங்கட்ரமணன், விஜயகுமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.வெங்கட்ரமணன் வருகிற 30-ந்தேதியும், விஜயகுமார் 31-ந்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1-ந்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2-ந்தேதியும் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்களில், வெங்கட ரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர். இதேபோல, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் பிப்ரவரி 8-ந்தேதி ஆஜராகவும், சசிகலாவின் செயலாளர் கார்த்திகேயன் பிப்ரவரி 5-ந்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...