பசுந்தேயிலைக்கு ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தி தேயிலை விவசாயிகள் போராட்டம்

நீலகிரி, ஜனவரி 25

பசுந்தேயிலைக்கு ரூ.30 ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி உதகை அருகேயுள்ள எடக்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எடக்காடு, சூண்டட்டி, நடுஹட்டி, முக்கிமலை, அட்டுபாயில், காயகண்டி, கவுண்டம்பாளையம், சிவசக்தி நகர், அரைஹட்டி, பாதகண்டி, தாவஹட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதில், அடுத்த கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், வரும் பிப்ரவரி மாதம் உதகையில் பேரணி நடத்தவும் என்று துர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஜே.பி.சுப்ரமணியம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.8 மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தத்தளிக்கின்றனர். கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்’ என்றார்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...