கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான மருத்துவ முகாம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்று நோயாகும். கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயினை பேப்ஸ் மியர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்து விடலாம்.

கோவை, ஜனவரி 25

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்று நோயாகும். கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயினை பேப்ஸ் மியர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்து விடலாம். தகுந்த சிகிச்சை மூலம் இதனைக் குணப்படுத்தியும் விடலாம்.

இந்த புற்று நோய்க்கான பரிசோதனை முகாம் கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் ஜனவரி 22ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி வரை அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பேப்ஸ்ஸ்மியர் பரிசோதனை சலுகை கட்டணத்திலும் மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒழுங்கற்ற அல்லது அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு, மாதவிடாய் நின்றபிறகு இரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடி வயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்திய உறவுக்குப்பின் இரத்தப்போக்கு, காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து இரத்தப்போக்கு உள்ளிட்ட மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறிகள் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரம் மற்றும் முன்பதிவிற்கும் 97901 97971 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...