தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 31-ம் தேதி இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது.

கோவை, ஜனவரி 25

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது. 

இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 6,140  காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. வயது வரம்பு 01.07.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தத் தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்விற்கு தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் டிச., 28-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வரும் 27-ம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் 31-ம் தேதி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இலவச பயிற்சி வகுப்பில் சேர தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...