வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தினவிழா அனுசரிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தினவிழா இன்று (ஜன. 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் கு. இராமசாமி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் எஸ்.மகிமைராஜா வரவேற்புரையாற்றினார்.

கோவை, ஜனவரி 26

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தினவிழா இன்று (ஜன. 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் கு. இராமசாமி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் எஸ்.மகிமைராஜா வரவேற்புரையாற்றினார்.

துணைவேந்தர் உரையாற்றுகையில், நாட்டை ஒன்றிணைத்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய குடியரசாக்கிய இந்தியத் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். இந்தியாவில், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களால் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைவருக்கும் உணவு அளிக்கும் நிலையடைந்தோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பையும், தற்போதுள்ள தேசத்தின் எதிர்பார்ப்பையும் சுட்டிக்காட்டினார்.



இதனைத்தொடர்ந்த, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களோடு தேசிய மாணவர் படை அதிகாரிகள் செல்லமுத்து, மற்றும் மனோன்மணி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப் பள்ளி சிறார்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...