குடியரசுத் தின விழாவில் “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” திட்டத்தை துவக்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 69-வது குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” என்னும் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 27

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 69-வது குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” என்னும் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 69-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்க பரிசுத்தொகையாக தலா ரூ.2,000 வழங்கினார்.

அதேப்போல் 2016-17 ம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் அதிகபட்ச இலக்கினை எட்டிய 20 வரிவசூலர்களுக்கு ஆணையர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய தற்காலிக ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப் பரிசுத்தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி தந்த 5 மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” என்ற ஒரு புதிய திட்டத்தை ஆணையர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கோவை மாநகராட்சி, தனியார் நிறுவனங்கள, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்கு தேவையான சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இத்திட்டத்தின் மூலம் தங்களுடை வளாகங்களை தூய்மையான சுகாதாரமான முறையில் பராமரிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பாக விரைவில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.



மேலும், இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் களரி, சிலம்பாட்டம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இவ்விழாவில், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையர் நிர்வாகம் செந்தில்குமார் ரத்தினம், உதவி ஆணையர் வருவாய் கே.ரவிக்குமார், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து பிரிவு அலுவலர்கள், மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தேசிய மாணவ படையினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...