பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் : ஹேமங் பதானி

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 27

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார். 

உதகை தனியார் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியாதாவது, அயல்நாடுகளில் இந்திய அணி சிறப்பாகத் தான் விளையாடி வருகிறது. தென் ஆப்ரிக்கா தொடர் மிகவும் கடினமானது. முதல் இரண்டு டெஸ்ட்களிலும் இந்தியா மோசமாக தோற்கவில்லை. ஒரு சில கேட்சுகளை தவறவிடாமல் பிடித்திருந்தாலும், பேட்டிங் சிறப்பாக செய்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம். கடை டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல வாய்ப்பு உள்ளது.

வெளிநாடுகளில் காலநிலை, சூழ்நிலை வேறு மாதிரியானது. விளையாட்டு வீரர்கள் அதற்கேற்ப மாறுவதற்கு நேரம் தேவைப்படுகிறது. தென் ஆப்ரிக்கா செல்வதற்கு முன் இந்திய வீரர்களுக்கு நன்கு பயிற்சி எடுக்க நேரம் இல்லாததால் தான் தோற்றது. இந்திய அணியில் சிறந்த வீரர்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் யார் சிறந்த முறையில் விளையாடினார்களோ அவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டு வீரர்கள் மட்டுமல்ல, சிறப்பாக விளையாடும் யாரும் இந்திய அணியில் இடம் பெறலாம். ஐபிஎல் போட்டிகள் இந்தியா இளம் வீரர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. கோலி மற்றும் தோனி வெவ்வேறு திறனை கொண்டவர்கள். தோனி எந்த உணர்ச்சியும் காட்டமாட்டார். கோலி மைதானத்தில் ஆக்ரோஷமாக இருப்பார்.

பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும். வெளிநாடுகளில் இருப்பது போன்று வேக பந்திற்கு சாதகமான மைதானங்கள் இந்தியாவில் உருவாக்க முடியாது. இங்கு மண்ணின் தன்மை வேறு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...