முதல்முறையாக நீலகிரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து வசதி

நீலகிரியில் அதிகரட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன், தனியார் பள்ளிகளைப் போல சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரியில் அதிகரட்டி அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன், தனியார் பள்ளிகளைப் போல சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 



தற்போது, ஆங்கிலவழி கல்வி மோகத்தில் அரசு பள்ளிகளை பெற்றோர் தவிர்ப்பதால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைய தொடங்கி, காலப்போக்கில் பள்ளிகள் மூடுவிழா கண்டு வருவது வேதனை அளிக்கிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி கிராமத்தில் கடந்த 1852-ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க இந்த ஆரம்ப பள்ளியில் கடந்த ஆண்டு 12 மாணவர்களாகக் குறைந்து காணப்பட்டது. 

இதனையடுத்து, இந்தப் பள்ளி மூடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அந்தப் பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுதுணையாக செயல்பட்டு அரசு பள்ளியில் ஆங்கிலவழி கல்வியை கொண்டு வந்து, அதற்காக ஆசிரியைகளை நியமித்து ஊதியமும் வழங்க முன் வந்துள்ளது. மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் சுற்றுவட்டார கிராமங்களான மணியட்டி, முட்டிநாடு, நுந்தளா, காத்தாடி மட்டம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வர ரூ. 17 லட்சம் செலவில் பள்ளி பேருந்து ஒன்றை வாங்கி இலவசமாக இயக்கி வருகிறது.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 135 மாணவர்களாக உயர்ந்துள்ளதால் அதிகரட்டி கிராம மக்கள் தங்கள் பள்ளியை தக்கவைத்துள்ளனர். ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகளை அந்தந்த கிராமமக்கள் ஊக்குவித்தாலே சிறப்பாக இருக்கும் என்பதற்கு அதிகரட்டி பள்ளியே சான்றாக உள்ளது.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...