சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துகளை அறிவியல் நூலாக பதிவிட வேண்டும் - மாவட்ட வன அலுவலர் ந. சதிஸ்

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

கோவை, ஜனவரி 28

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வன அலுவலர் ந.சதிஸ், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் பல இயற்கை அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பேசுகையில், "இது போன்ற சூழல் சந்திப்புகளில் பல தரப்பட்ட அறிஞர்களும், ஆர்வலர்களும் பேசியுள்ளனர். அவர்களுடைய கருத்துகளை அறிவியல் சார்ந்த தகவல்களை பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் சார்ந்த நூலாகப் பதிவிட வேண்டும்" என்றார்.



வாழ்த்துரை வழங்கிய பேரூர் ஆதினம் இளைய பட்டம் தவத்திரு மருதாச்சலம் அடிகளார் கூறுகையில், "குழந்தைகளை சமூக வலைதளங்களில் இருந்து காப்பாற்ற வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். இதனால் அவர்களது கவனம் மாடித்தோட்டத்தின் மீது திரும்பும். மாடித்தோட்டம் அமைப்பதினால் பசுமையை அனைவரும் நம் வீடுகளிலேயே விதைக்கிறோம்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஓசை காளிதாஸ் பேசுகையில், "இயற்கைக்கான குரலாக ஒலிக்கும் எமது செயல்பாடுகள் பதினெட்டாம் ஆண்டாகத் தொடர்கிறது. மக்கள் பங்களிப்போடுதான் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

அதன் ஒரு வடிவம்தான் சூழல் சந்திப்பு. அது இன்று 100-வது சூழல் சந்திப்பை எட்டியுள்ளது. கோவையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இயங்கும் பல அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் உருவாக சூழல் சந்திப்பு பெரும் காரணமாக இருந்துள்ளது" என்றார்.



இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இயற்கைக்காகப் பாடுபட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...