கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று துவக்கம்

தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் 23-வது போலியோ சொட்டு மருந்து முகாமின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இன்று (ஜன. 28), மார்ச் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.


கோவை, ஜனவரி 28

தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் 23-வது போலியோ சொட்டு மருந்து முகாமின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இன்று (ஜன. 28), மார்ச் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. 

இதில், கோவை மாநகராட்சி சார்பாக மாநகராட்சி பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட 1,61,787 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.



சீதாலட்சுமி நகர்நல மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பங்கேற்று குழந்தைகளுக்கு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள், ரோட்டரி கிளப் மற்றும் மிட்டவுன் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை:-

வால்பாறை காந்திசிலை அருகே நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் துவக்கி வைத்தார். வால்பாறை வட்டார மருத்துவர் பிரவின் மற்றும் சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து வால்பாறை பகுதியிலுள்ள வால்பாறை, சோலையார் நகர் மற்றும் முடீஸ் நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக மொத்தம் 101 போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 3688 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

நீலகிரி:-



நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...