9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி பிப்.2ல் துவக்கம்

9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக (பில்ட் இன்டெக்) கண்காட்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று துவங்கி 5-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை: 9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக (பில்ட் இன்டெக்) கண்காட்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று துவங்கி 5-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஹூசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், கொடிசியா சங்கத் தலைவர் சுந்தரம், பில்ட் இன்டெக் சேர்மன் கார்த்திகேயன், கொடிசியா கெளரவ செயலாளர் குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.



அப்போது, கொடிசியா சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில், "இந்தக் கண்காட்சியை காலை 10 மணி முதல் 2 மணி வரை  வணிக பார்வையாளர்களும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ரூ.50 கட்டணம் செலுத்தி பொது மக்களும் பார்வையிடலாம்.

இதில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், புது தில்லி, ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு 220 அரங்குகள் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 300 அரங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பில்ட் இன்டெக் சேர்மன் கார்த்திகேயன் பேசுகையில், "கொடிசியா அரங்கில் ஏ, பி, சி அரங்குகளில் கட்டிட பொருட்களின் கண்காட்சியும், ஈ அரங்கு முழுக்க பர்னிச்சர் கண்காட்சியும் இடம் பெறும். இந்த கண்காட்சி 1,60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு 50 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் சமீபத்திய தொழில்நுட்ப கட்டுமான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் இடம் பெற உள்ளது. கட்டிட பொருட்கள், சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர்கள், எல்.இ.டி லைட்டிங், நீச்சல் குள தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம் பெறும்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...