பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லிகள் வழங்கும் தனியார் ஓட்டல் உரிமையாளர்

கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வரும் தனியார் ஓட்டல்,பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவை: கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வரும் தனியார் ஓட்டல், பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இயந்திரமயமான இன்றைய காலத்தில் அனைத்திலும் வியாபார நோக்கில் பார்க்கும் மக்களிடையே, அவ்வப்போது மக்களின் நலன்கருதி சிறிய அளவிலான உதவிகளை சிலர் ஆங்காங்கே செய்து கொண்டு தான் வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் பிரபலமாகின்றனர். பலர் வெளியுலகிற்கு தெரியாமலும் தங்களது உதவிகளை செய்து கொண்டே வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஏ1 உணவகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி, ஓட்டல் உரிமையாளரான ராசு பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் காலை உணவை வழங்கி வருகிறார். ரூ. 10 கொண்டு சென்றால் போதும் 5 இட்லியை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்லலாம்.



இது குறித்து உரிமையாளர் ராசு கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்நிய குளிர்பானங்களை தவிர்க்குமாறு மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தங்களுடைய ஓட்டலில் அந்நிய குளிர் பானங்கள் விற்கப்படுவதில்லை. தற்போது, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5 இட்லி 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறேன். தமிழர் திருநாள் முதல் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இட்லிக்கு தேவையான சாம்பார், சட்னி பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்காமல் பாத்திரங்களில் வழங்குகிறோம். என்றார். 

கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலேயே இவரது ஓட்டலில் தான் குறைந்தபட்ச விலையில் புரோட்டா, சப்பாத்தி ரூ. 8-க்கும், தோசை ரூ.10-க்கும்,

மதிய முழு உணவு அசைவ குழம்புடன் ரூ. 50-க்கும் வழங்கி வருகிறார்.



இது குறித்து அப்பகுதியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் விசைத்தறி பிரதான தொழிலாக இருப்பதால், காலையில் நேரமாகவே பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால், பெரும்பாலான சமயம் குழந்தைகள் இரவு சமைத்த உணவையே சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது, ஓட்டலில் குறைந்த விலையில் காலை உணவு கிடைப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...