ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ. 10 கோடி மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்

கோவையில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ. 10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அதன் உரிமையாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவையில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ. 10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அதன் உரிமையாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள போடிபாளையத்தில் வேலுசாமி துளசியம்மாள் சிட் பண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கடந்த பத்து வருடங்களாக வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாதம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

பணத்தை கட்டியவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை உரிமையாளர் வேலுச்சாமியிடம் கேட்க,  பணம் தராமல் இழுத்தடித்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மதுக்கரை போலீஸில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளனர். அதன்பெயரில், ஜனவரி மாதம் 30-ம் தேதிக்குள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு முழு பணத்தை தருவதாக வேலுச்சாமி பத்திரத்தில் எழுதி தந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக சென்றுள்ளனர். 

இந்நிலையில், இன்று போடிபாளையத்தில் உள்ள வேலுச்சாமியின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைப் பெற சென்ற போது, வேலுசாமியைத் தவிர  அவரது மகள் சித்ரா மற்றும் பேரன் கோகுல் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த முதலீட்டாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், நம்பிக்கையின் பெயரிலேயே இவர்களிடம் ஏலச்சீட்டுக்கு பணத்தை கட்டினோம். 3 ஆண்டுகள் சரியாக மாத சீட்டிற்கான பணத்தை வழங்கி வந்தவர்கள், கடந்த 8 மாதங்களாக பணத்தை தராமல் இழுத்தடிக்கின்றனர். தங்களைப் போல மாத ஏலச்சீட்டில் 500-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தி உள்ளனர். 10 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

பணத்தை திருப்பி கேட்டால், தான் ஆளும்கட்சி அமைச்சரின் உறவினர் என வேலுச்சாமி மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், 

தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெறும் வரை அங்கிருந்து கலைந்து செல்லப் போவதில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...