ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணை மத்திய அமைச்சரிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை : கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 



மத்திய வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் திட்ட அமைச்சர் ஹர்தீப் சிங்கை, தமிழக மாநகராட்சி நிர்வாகம்,  கிராம மேம்பாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அமைச்சர் எஸ்.பி. வேலுச்சாமி டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி நடவடிக்கைகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய அமைச்சரிடம் வழங்கினார். 



அந்தக் குறிப்பாணையில், நாட்டில் அதிக நகரங்கள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர்ப்புற உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் தண்ணீர் வசதி, நிலத்தடி கழிவுநீர், சாலை மற்றும் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 நகராட்சிகளும், 124 மாநகராட்சிகளும், 528 டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள நகர் பட்டியலில், தமிழகத்தின் 12 நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...