2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவர் தமிழிசை

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.

ஜனவரி 30

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவருக்கான விருதை ர்வதேச மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பல்வேறு பெண் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.கவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் அவருக்குப் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண் தலைவர் : 

தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பெண் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேசிய அளவில் பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி ஏற்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா அம்மாநில பா.ஜ.க., தலைவராக ஏற்கெனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...