அவினாசி சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் பணியினை அமைச்சர் ஆய்வு

உப்பிலிபாளையம்- சின்னியம்பாளையம் வரியிலான சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் மண் ஆய்வுப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.

கோவை : உப்பிலிபாளையம்- சின்னியம்பாளையம் வரியிலான சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் மண் ஆய்வுப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.



கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகன பெருக்கத்தினை கருத்தில் கொண்டு உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம், காளப்பட்டி சாலை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை ரூ.950 கோடி அறிவிக்கப்பட்டது.



அதனைத்தொடர்ந்து, 2016 நவம்பர் 30ம் தேதியன்று விரிவான திட்டம் தயாரித்து நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு சர்வே மற்றும் போக்குவரத்துக் கணக்கீடு பணி முடிக்கப்பட்டு 170 இடங்களில் மண் பரிசோதனை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் 60 இடங்களில் ஆழ்துளை பணி முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற உள்ள நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா அருகே ஆய்வு மேற்கொண்டார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் மண் பரிசோதனை செய்யும் பணி நிறைவடையும். மண் பரிசோதனைக்காக 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தினை இரண்டாண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உக்கடம் பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரிப்பேட்டை போன்ற பணிகள் அனைத்தும் கொண்டு வரப்படும்.

காவிரி நீருக்காகத் தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

கோவை, அவினாசி சாலையில் அமையும் பாலமும், மெட்ரோ திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட கால திட்டம், அதற்காக இந்த பால திட்டத்தை நிறுத்த முடியாது. இரண்டும் பாதிப்பில்லாத வகையில் வடிவமைக்கப்படும். அதேப் போல கோவை 100 அடி சாலையில் இருக்கும் பாலம் பிரச்சனைகள் இல்லாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மிரட்டியதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவல் என்பதால் அதற்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. இராணுவ தளவாடங்களுக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய அமைச்சரை சந்தித்த போது எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன் போன்ற பாஜக நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர். பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதை நான் பார்க்கவில்லை. அதை பார்க்காமல் கருத்து சொல்லமுடியாது.

தமிழகத்தில் பேருந்து வழித் தடங்களை அமைச்சர்கள் வாங்கிவிட்டதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழகத்தில் தரமான 2000 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார், ஆறுக்குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...