2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். 1மணி நேரம் 51 நிமிடம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்தார்.

இந்தியா: 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். 1மணி நேரம் 51 நிமிடம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

  • விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
  • முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு 
  • விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் 
  • விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ. 22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: 
  • அனைவருக்கும் வீடு திட்டத்தில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
  • 2 கோடி புதிய கழிவறைகளைக் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது
  • டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்களை மேற்கொள்ளப்படும்
  • இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் 8 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்படும்
  • மீனவர்களுக்கு கிஷன் கடன் அட்டைகள் வழங்கப்படும்
  • மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி இல்லை
  • வருமானவரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவு சலுகையாக ரூ.40 ஆயிரம் அறிவிப்பு
  • வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும்:
  • மாத சம்பளதாரர்களுக்கு வருமானவரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும்
  • தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
  • ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்
  • தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது
  • கருப்புப் பண தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது
  • வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது
  • வருமானக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது
  • எம்.பி.க்களுக்கான படிகள் ஏப்ரலுக்கு பிறகு உயர்த்தப்படும்
  • பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் 5 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்
  • ஆளுநரின் சம்பளம் மாதம் ரூ.3.5 லட்சமாக உயர்வு
  • குடியரசுத் தலைவரின் சம்பளம் மாதம் ரூ.5 லட்சமாகவும், துணைகுடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.4 லட்சமாகவும் உயர்வு
  • 2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும்
  • நாட்டில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போல தனி அடையாள அட்டை வழங்கப்படும்
  • கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
  • வரலாற்று சிறப்பு மிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப்படும்
  • கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3,073 கோடி ஒதுக்கீடு
  • ஜவுளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு
  • எல்லா ரெயில் நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்• 
  • பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும்
  • பெரம்பூரில் அதிநவீன ரெயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்
  • இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்குகளாக அதிகரிக்கப்படும்
  • 25 ஆயிரம் ரெயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்
  • ரெயில்வேத்துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி
  • சுற்றுலாதுறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை
  • நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச எல்லைகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு; ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்
  • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது
  • மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி இல்லை
  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15%லிருந்து 20% ஆக உயர்வு

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...