உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் : 4 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வரைவு வார்டு மறுவரையறை ஆணையத்தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான் தலைமையில் கோவையில் நடைபெற்றது

கோவை : உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வரைவு வார்டு மறுவரையறை ஆணையத்தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான் தலைமையில் கோவையில் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்.,01) உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனை, கருத்துக்களை நேரடியாகக் கேட்பதற்கான மண்டல அளவிலான கூட்டம் மறுவரையறை ஆணையத் தலைவரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம். மாலிக்பெரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு மாநில தேர்தல் ஆணையர் எம். மாலிக்பெரோஸ்கான் பேசுகையில், வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் வெளியிடப்பட்டு அக்கருத்துருக்களின் மீது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களின் தொடர்பான மனுக்கள் கடந்த மாதம் 12-ம் தேதி வரை பெறப்பட்டன. அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை நேரடியாகத் தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைப் பொருத்தவரை கடந்த மாதம் 12-ம் தேதி வரை பெறப்பட கருத்துக்கள் மனுக்களில் 671 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மறுவரையறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் 1,717 பரிசீலனையில் செய்யப்பட உள்ளன. மேற்படி மனுக்களை பரீசிலனை செய்து ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறினார். 

இக்கூட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்களான நகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கா.பாஸ்கரன், பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி, மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் த.சு.ராஜசேகர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் த.ந.ஹரிஹரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் ஜே.இன்னோசென்ட் திவ்யா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் கே.எஸ்.பழனிசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் எஸ்.பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...