அன்னூரில் பெண்ணை கொலை செய்த வடமாநில வாலிபர்கள் மேற்குவங்கத்தில் கைது

அன்னூர் அருகே மனைவியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்து கணவனுக்கு மின் சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்ற வட மாநில தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்னூர்: அன்னூர் அருகே மனைவியை கொன்று நகை பணத்தை கொள்ளையடித்து கணவனுக்கு மின் சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்ற வட மாநில தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி மயில்சாமி இவரது மனைவி ராஜமணி .இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ள நிலையில் இருவரும் தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீடு விரிவாக்க பணிக்காக பணிகள் மேற்கொண்டு வரும் இவர்களது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மூன்று வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 25- ம் தேதி இரவு டைல்ஸ் ஓட்டும் பணியை மேற்கொண்ட வட மாநில தொழிலாளர்கள் மூவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜாமணி வீட்டின் கதவை தட்டி எழுப்பி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

தண்ணீர் எடுக்க ராஜாமணி வீட்டினுள் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற அவர்கள் ராஜாமணியை பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த ராஜாமணியின் கனவர் மயில்சாமியை கட்டிவைத்து அவருக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றதோடு, வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.

இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் ஈரோடு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர் அப்போது கிடைத்த தகவலில் அவர்களது பெயர் சாம்ராஜ் , பிந்து , அஜய் என்பதும் அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் தப்பிய கொள்ளையர்கள் மேற்கு வங்கத்திற்கு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செல்போன் மூலம் கொலையாளிகள் இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படையினர் மேற்கு வங்காளம் சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அங்கு பதுங்கி இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களை நாளை விமானம் மூலம் அழைத்து வர போலிசார் முடிவு செய்துள்ளனர்.

தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...