அரசின் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



திருப்பூரிலிந்து டிசம்பர் மாதம் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் திருப்பூரிலிருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து பக்தர்கள் மீது மோதியது. இச்சம்பவத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு தலா ஒருலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது. 

இந்த நிலையில், பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உயர்த்தி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில், உயிரிழந்த குடும்பத்தினரை இதுவரை எந்தஒரு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வழங்கவுள்ள ஒரு லட்சம் தங்கள் குடும்பத்திற்கு போதாது. ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டும். தங்கள் குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவினை அரசு ஏற்க வேண்டும். திருப்பூரிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடைமேடை அமைத்துத் தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு உடனே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...