தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 160 கழிவறைகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கோவை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.



வார்டு எண் 16, 17, 18 மற்றும் 19-க்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளை, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் முயற்சியாக, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 160 கழிவறைகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் கட்டிமுடிக்கப்பட்டன. இந்த தனிக்கழிப்பறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், மாநில நிர்வாக இயக்குனர் R. சித்தார்த்தன், கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தனிக்கழிப்பறைகளை கட்டித்தந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இதையடுத்து, பேசிய மாநகராட்சி ஆணையாளர், பொதுமக்களின் தேவைக்கேற்ப நகரின் பெரும்பாலான இடத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நூறு சதவிகிதம் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான நகரமாகக் கோவையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதற்கு, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாநகராட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



மேலும், கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...