விவசாயிகளுக்குக் கடன் தேவையில்லை...! விளைபொருளுக்கான விலை நிர்ணயம் மட்டுமே தேவை..!

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 11 லட்சம் கோடி கடன் தேவையில்லை என்றும், விளைபொருளுக்கான விலை நிர்ணயம் தான் தேவை என உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான 11 லட்சம் கோடி கடன் தேவையில்லை என்றும், விளைபொருளுக்கான விலை நிர்ணயம் தான் தேவை என உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். 



பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் உழவர் தலைவர் நாராயணசாமி அய்யாவின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கொடியினை ஏற்றி நாராயணசாமி அய்யாவின் திருவுருவப் படத்திற்கு கட்சியின் தலைவர் செல்லமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், நடப்பு ஆண்டிலும் பருவமழை பொய்த்து வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் உடனடியாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும் பயிர் பாதுகாப்பு தொகையும் வழங்க வேண்டும், அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 150-ம், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000-ம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், திருப்பூர் மாவட்டத்தின் உயிர் நாடியான பி.ஏ.பி திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து பேசுகையில், விவசாயிகளுக்கான வருமானத்தை இரண்டு மடங்காகப் பெருக்குவோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எப்படி பெருக்குவார்கள் என பார்த்தால் விவசாயிகளுக்குக் கடன் தொகையை அறிவித்துள்ளார்கள். இவர்கள் அறிவித்துள்ள ரூ. 11 லட்சம் கோடி கடன் என்பது மீண்டும் விவசாயிகளைக் கடனாளியாகத்தான் மாற்றும். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள கடன் தேவையில்லை. விளை பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்தால் விவசாயிகள் அனைவரும் கடன் இல்லாமல் வாழலாம். இவ்வாறு கூறினார்.

இந்தச் செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் பாலசுப்பிரமணி, மாநில மகளிரனி தலைவி ராஜரீகா மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...